தமிழகத்தில் பள்ளிகளுக்கு 30 நாட்கள் விடுமுறை – 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதே போல கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி முடிவடைகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 9 முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் கிடையாது. இருப்பினும் மே 13 ஆம் தேதி வரை இந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இந்நிலையில் மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கிட்டதட்ட ஒரு மாதம் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.