Skill-Lync நிறுவனத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த மூன்று மாதங்களில் திட்டம்!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் Skill-Lync நிறுவனம் அடுத்து வரும் மூன்று மாதங்களில் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள பல தொழில்துறை நிறுவனங்கள் பட்டதாரி இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆயிரக்கணக்கிலான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்ஜினியரிங் கல்வி தளமான ஸ்கில்-லின்க் தனது அடுத்த கட்ட வளர்ச்சியை மேம்படுத்த 2022 பிப்ரவரி மாதத்திற்குள் 3,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது.
Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி அசத்தல் திட்டம் – முழு விவரங்கள் இதோ!
இந்த கல்வி நிறுவனம் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள சந்தைகளில் தனது பணியாளர்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக பணியமர்த்தப்படுபவர்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுத் துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனம் 2021ம் ஆண்டு வருவாயில் சுமார் 5 மடங்கு அதிகரிப்பை கண்டதாக தரவுகள் கூறுகிறது. மேலும் 2030ம் ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை வழங்கவும் இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவாரணம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
Skill-Lync நிறுவனம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெடிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஹைப்ரிட் இன்ஜினியரிங் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு திறன்களுக்கான ஐந்து சிறப்புப் படிப்புகளை வழங்குகிறது. மேலும் ஸ்டார்ட்அப் தொழில்துறையுடன் இணைந்து பாடநெறிகளை நடத்தும் இந்த நிறுவனம் நடைமுறை வெளிப்பாடு மற்றும் அடிப்படை கருத்துகளுக்கு இடையே இருக்கும் சமநிலையையும் உறுதி செய்கிறது.