அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வுடன் மொத்த DA தொகை 34% ஆக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைய உள்ளனர். இப்போது மத்திய அரசை தொடர்ந்து சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 3 சதவீதமாக திருத்த முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சண்டிகர் நிர்வாகம் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், அடிப்படை ஊதியத்தில் ஏற்கனவே உள்ள DA தொகை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ONGC நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
இதேபோல், யூனியன் பிரதேச நிர்வாகம் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை (DR) ஜூலை 1, 2021 முதல் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாகவும், ஜனவரி 1, 2022 முதல் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் முறையே 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. அந்த வகையில், 6வது பஞ்சாப் ஊதியக் குழுவின் படி அவர்களின் ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே அரசாங்கம், திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் தொடர்ந்து ஊதியம் பெறும் பயனாளிகளுக்கு DR தொகையை ஜனவரி 1, 2022 முதல் 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக உயர்த்தியுள்ளது.