மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% DA உயர்வு கிடைக்குமா? அரசின் முடிவு என்ன? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாத தவணைக்கான 3% அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
DA உயர்வு
தற்போது 3% அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு வழங்கப்படுமா என்பது குறித்த குழப்பங்கள் எழுந்துள்ளது. அதாவது பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) உயர்வு செய்யப்படுவதால், 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனை செல்லாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச்.16ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் DA உயர்வு குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
இதில் DA குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் ஹோலி பண்டிகைக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பட்ஜெட் விவாதத்தின் இரண்டாம் பகுதியின் போது, பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஏன் தேக்கமாக உள்ளது என்று எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்தது. கூடுதலாக, தற்போதைய பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப DA/DR ஐ உயர்த்துவதை நிர்வாகம் பரிசீலிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை, தொழிலாளர் பணியகம், M/o வெளியிட்டுள்ள தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI0IW) பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த விலைக்கு ஏற்ப DA/DR வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்கும். இருப்பினும் DA/DR தொகையை நிலையான 3% இல் பராமரிக்காது’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
இதற்கு முன்னதாக 2021 அக்டோபர்-டிசம்பர் மாத காலாண்டில் சராசரி சில்லறை பணவீக்கம் 5.01 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் அது 6.07 சதவீதமாக உயர்ந்தது. மேலும் சமீபத்திய அறிக்கைகளின்படி, மத்திய அரசு மீண்டும் ஒருமுறை 3% அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தலாம். இந்த சமீபத்திய உயர்வுடன் ஊழியர்களின் அடிப்படை வருமானத்தில் மொத்த DA 34% ஆக இருக்கும். இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.