அரசு ஊழியர்களுக்கு ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு தரப்பு தகவல்!

0
அரசு ஊழியர்களுக்கு ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள போனஸ் அறிவிப்பு - மத்திய அரசு தரப்பு தகவல்!
அரசு ஊழியர்களுக்கு ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள போனஸ் அறிவிப்பு - மத்திய அரசு தரப்பு தகவல்!
அரசு ஊழியர்களுக்கு ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு தரப்பு தகவல்!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தேதிகளில் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வழக்கமாக மூன்று மாத கால தாமதத்திற்கு பின்னர் தான் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

CIPET நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

மேலும் அக்டோபர் நான்காம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வரும் 42 சதவீத அகவிலைப்படி உயர்வு 45 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் மத்திய அரசின் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!