3 மாத கர்ப்பிணிகள் வங்கிப் பணியில் சேர முடியாது – SBI நிர்வாகம் அறிவிப்பு! தேர்வர்கள் அதிர்ச்சி!
பாரத ஸ்டேட் வங்கி தற்போது புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
வங்கி நிர்வாகம் அறிவிப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி SBI ஆகும். இந்திய அரசால் நடத்தப்படும் அரசின் வரவு செலவு கணக்குகளும் இந்த வங்கி மூலம் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் ஸ்டேட் பேங்க் கிளைகள் உள்ளன. இந்நிலையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட SBI வங்கியில் அதிகமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்.
இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு, செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன. இந்நிலையில் புதிய பணியாளர் சேர்க்கைக்கான வழிகாட்டு விதிகளை தற்போது ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அடிப்படையில் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள கர்ப்பிணிகள் பணியில் சேர தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 31 வரை அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
மேலும் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற பின் 4 மாதத்திற்கு பிறகு பணியில் சேர தகுதி உள்ளவர்கள் ஆவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கி பதவி உயர்வுக்கு இந்த விதி பொருந்தும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகள் 13 ஆண்டுக்கு முன்பே கொண்டுவரப்பட்டு எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது மீண்டும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.