ஜனவரி 31 வரை அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
கொரோனா 3ம் அலைத்தொற்றின் திடீர் எழுச்சிக்கு மத்தியில் நேற்று (ஜன.28) இரவு முதல் திங்கள் கிழமை காலை வரை தொடர்ச்சியாக 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
முழு ஊரடங்கு
சமீப காலமாக கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்று (ஜன.28) இரவு முதல் அடுத்த 64 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட பிற நகரங்களில் மூன்று வாரங்களுக்கு முன்னர் துவங்கி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இப்போது நிபுணர்களின் கூற்றுப்படி, ஜம்மு காஷ்மீரில் கொரோனா 3ம் அலைத்தொற்று தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு சில நாடுகளில் யூனியன் பிரதேசம் முழுவதும் நோய்த்தொற்றுகள் குறையத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் நேற்று (ஜன.28) அமல்படுத்தப்பட்ட வார இறுதி முழு முடக்க கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி காலை வரை சுமார் 64 மணி நேரத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக, குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை நேர்மறை சோதனை செய்தவர்களை விட அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
IPL மெகா ஏலம்: மீண்டும் யுவராஜ் சிங்கை குறிவைக்கும் KKR – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் நேற்று (ஜன.28) ஒரு நாளில் மட்டும் 4,354 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 5 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரப்பூர்வ சுகாதார அறிக்கைகள் தகவல் அளித்துள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு மக்களிடையே கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.