IPL மெகா ஏலம்: மீண்டும் யுவராஜ் சிங்கை குறிவைக்கும் KKR – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் IPL மெகா ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று BCCI அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீண்டும் தனது பெயரை IPL ஏலத்தில் பதிவு செய்துள்ளதால் கொல்கத்தா அணி யுவராஜை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL மெகா ஏலம்:
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது. ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்கும். இந்த ஆண்டு IPL இல் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதில் பல கோடிக்கணக்கான ரூபாயில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் தொடருவேன் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் தந்து பெயரை பதிவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் யுவராஜ் சிங்கின் ஏலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யுவராஜ் சிங்கை அதிக தொகைக்கு (10 கோடி) ஏலத்தில் எடுத்தது. அவர் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கூடுதலாக 4 கோடி கொடுத்து ஏலத்தில் யுவராஜ் சிங்கை தக்கவைத்துக்கொண்டது. இதனால் 2014 ஆம் ஆண்டு அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக யுவராஜ் சிங் திகழ்ந்தார். 2014 சீசனில், யுவராஜ் 34.18 சராசரியுடன் 376 ரன்கள் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டநாயகனாக தேர்வு பெற்ற யுவராஜ் சிங்கை இறுதியில் RCB அவரை வாங்கியது. 3 வருடங்கள் RCB அணியில் யுவராஜ் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 4 வரை 27 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
யுவராஜ் தனது ஓய்வுக்கு முன் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்), புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), டெல்லி கேபிடல்ஸ் (டிசி), மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஆகியவற்றிற்காக விளையாடினார். தற்போது மீண்டும் 15வது IPL தொடரில் யுவராஜ் சிங் விளையாட உள்ளனர். இதனால் மீண்டும் கொல்கத்தா அணி யுவராஜை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணிக்கு அனுபவமான வீரர் தேவைப்படுவதால் யுவராஜ் சிங் KKR அணியில் விளையாட வாய்ப்புள்ளது.