தினமும் 3 மணி நேரம் மின் விநியோகம் தடை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவி உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தினசரி 3 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது, மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்தடை:
நாடு முழுவதும் கொரோனா பரவலில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படும் மின்தடை குறித்து எழுந்த புகார்களை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே மின் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உலகளவில் 80% பள்ளிகள் திறப்பு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
தற்போதைய நிலவரப்படி அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மின் விநியோகம் இருக்கும் என்றும், அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இருப்பினும் தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – எச்சில் துப்புவதை தடுக்க புதிய திட்டம்!
இது குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டதாவது, ‘இனி மேல் நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்’ என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலை பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.