உலகளவில் 80% பள்ளிகள் திறப்பு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!
கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 80% பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. அதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை, உலக வங்கி மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – எச்சில் துப்புவதை தடுக்க புதிய திட்டம்!
‘உலகளவில் 200 நாடுகளில் 80 சதவீத பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன என்றும் இதில் 54% பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு நேரடியாக வந்து பாடம் நடத்துகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 34 சதவீத பள்ளிகளில் நேரடி வகுப்பு, ஆன்லைன் வகுப்பு இரண்டும் கலந்து நடத்தப்பட்டு வருவதாகவும் 10 சதவீத பள்ளிகளில் எப்போதாவது வகுப்பு நடத்தப்படுவதாகவும் கண்டறியப்பட்ட நிலையில் 2 சதவீத பள்ளிகளில் எந்த வகுப்பும் நடத்தப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்வழி சான்றிதழ் தர மறுத்த தலைமை ஆசிரியர் – மாணவர்கள் பதற்றம்!
அதனை தொடர்ந்து உலக வங்கி கல்வி அணியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 53 சதவீதம் நாடுகளில் உள்ள பள்ளிகள் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று முக்கியத்துவம் அளிக்கின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். முககவசம், சமூக இடைவெளி, காற்றோட்டம் ஆகியவற்றை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.