ரயில் பயணிகள் கவனத்திற்கு – எச்சில் துப்புவதை தடுக்க புதிய திட்டம்!
இந்தியாவில் ரயில் நிலைங்களில் எச்சில் துப்புவதை தடுத்து இதைச் சமாளிப்பதற்காக ஒரு பசுமையான கண்டுபிடிப்பை ண்மடைமுறைப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான தானியங்கி இயந்திரங்களை 42 ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே அமைத்து வருகிறது.
ரயில் நிலையங்கள் :
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது முதல் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. இதனால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்ப கூடாது, மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில் நிலையங்களில் பான் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் எச்சில் துப்புவதால் உண்டாகும் கறைகளை நீக்க ஏராளமான தண்ணீரை மட்டுமல்லாது ஆண்டுக்கு ரூபாய் 1200 கோடி ரூபாயை இந்திய ரயில்வே செலவிடுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்வழி சான்றிதழ் தர மறுத்த தலைமை ஆசிரியர் – மாணவர்கள் பதற்றம்!
இதனை தடுக்கும் வகையில் ஒரு பசுமையான கண்டுபிடிப்பை இந்திய ரயில்வே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது எச்சில் துப்புவதற்காக சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய, மக்கக்கூடிய பை ஒன்றை இந்திய ரயில்வே பயணிகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது. இந்தப் பையில் மேக்ரோமாலிக்யூல்கள் பல்ப் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது பைகளில் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை வெளியே கசிய விடாமல் தடுக்க செய்யும்.
ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு – தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!
மேலும் இதில் விதை மற்றும் எச்சிலை உறிஞ்சி அதை திடப் பொருளாக மாற்றும் பொருட்களும் இருக்கும். இந்த சிறிய பைகளை 15 முதல் 20 முறை மீண்டும் பயன்படுத்தலாம் என்று தயாரிப்பாளர் கூறுகிறார். மண்ணில் தூக்கி எறிந்த பின்னர் இதில் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கும். நாக்பூரைச் சேர்ந்த ஈசிஸ்பிட் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரங்களை ரயில் நிலையங்களில் நிறுவத் தொடங்கிவிட்டது.