‘இந்த’ 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல் – அரசின் உத்தரவு!

0
'இந்த' 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல் - அரசின் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் மூடுவது தொடர்பான புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.

மது கடைகள் மூடல்:

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதிகளில் மதுபான கடைகள் அனைத்தும் மூட வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் காரணமாக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்னேற்பாடு நிகழ்ச்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட மாஹியில் மதுபான கடைகள் ஏப்ரல் 24 முதல் 26 ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி துறையில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!!!

இதேபோல் ஆந்திர பிரதேசத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் பிராந்தியமான ஏனாம் பகுதியில் மே 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதிகளில் அனைத்து விதமான மதுபான கடைகளும் மூடுவதற்கு கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை அனைத்து மதுபான கடை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!