தமிழகத்தில் கோடை காலத்தின் காரணமாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க தீர்வு உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
மின் கட்டணம் குறைப்பு:
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமானது முதலே மின் கட்டணமானது உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி மின்சார நிலைக்கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன் மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம்மின் கட்டண உயர்வு குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்ட அறிவிப்பானது அமைந்துள்ளது.
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த அறிவிப்பில் “உதய்” மின் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்ட கடன் சுமை குறைக்கப்பட்டு வருகிறது. “பீக் ஹவர்” கட்டண பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளோம். எனவே இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். தற்போது கோடை காலம் நடந்து கொண்டு இருப்பதால் மின்தடை பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.