தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!
கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பள்ளி மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கற்றல் விளைவை சரி செய்ய தற்போது தொடக்க பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்று வந்தனர். இந்த கல்வி முறை மாணவர்களின் கற்றல் அடைவில் கேள்வியை எழுப்பியது. குறிப்பாக தொடக்க கல்வி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டதால் எழுத்துக்களையே மறந்து விட்டன. அவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் விளைவை சரி செய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அக்.06ம் தேதி வரை மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அதில் ஒன்றுதான் 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டம். வரும் 2025ம் ஆண்டிற்குள் 8 வயதுள்ள அணைத்து குழந்தைகளையும் எழுதுதல் மற்றும் வாசித்தலில் மற்றும் கணித எங்களை அறியும் திறனுடையவர்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.இத்திட்டத்தை நடப்பு (2022-23) கல்வியாண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களை தயார் செய்வதற்காக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டதில் உள்ள 4,128 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை 3 நாட்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்கவுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ok…👍
Happy mam
Enna work