தமிழகத்தின் இப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்களின் கற்றல் நலன் கருதி கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் முறையே சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை, மீண்டும் ஊரடங்கு – ஓமைக்ரான் எதிரொலி!
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடித்து வருகின்றனர். இன்னும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் என்று சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
IND vs SA தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அவர்களுடன் 12ம் வகுப்பு படித்து வரும் 600 மாணவர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பள்ளி மற்றும் விடுதியில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள உள்ளதால் இன்று முதல் அதாவது டிச.20 முதல் 22ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திருச்சியில் சீராத்தோப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பள்ளியிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.