கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை, மீண்டும் ஊரடங்கு – ஓமைக்ரான் எதிரொலி!
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் முயற்சியாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கொண்டாட்டங்களுக்கு தடை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்து விட்டது என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த ஓமைக்காரன் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டிபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பாதிப்புகள் தென்பட்டு வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த இருவருக்கு முதலில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் சனிக்கிழமை செயல்படுமா? மாநில அரசு விளக்கம்!
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக இழப்புகளை சந்தித்தது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதனால் அம்மாநில அரசு தடுப்பு பணியாக முழு ஊரடங்கை அறிவித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1.65 லட்சம் ஊதியத்தில் BMRCL வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது மூன்றாம் அலையின் தொடக்கம் என்றும் கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் தலைநகர் மும்பையில் மட்டும் 22 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலால் மீண்டும் ஊரடங்கு வரும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதனால் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்ற கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.