தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் 2500 – பா.ஜ.தலைவர் கோரிக்கை !
தமிழகத்தில் 2022ல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து பொள்ளாச்சி வடக்கு – கிழக்கு ஒன்றிய பா.ஜ.தலைவர் மாணிக்கம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பா.ஜ.தலைவர் கோரிக்கை
தமிழகத்தில் தமிழர் திருநாளான 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை ஆகியவை வரும் ஜனவரி 3ம் தேதி ரேஷன் கடை மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் முழு கரும்பு உட்பட பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம் , திராட்சை தலா 50 கிராம் , பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ, மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம் ,புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம் ,கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ ஆகிய 21 வகையான பொருட்கள் துணி பையில் போட்டு பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க உள்ளன.
கொரோனாவை தடுக்க பிப்.1 வரை புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
இந்த அறிவிப்பு வந்தவுடன் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது . இந்த திமுக ஆட்சியிலும் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் வழங்கப்படும் என மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் கொரோனா நிவாரண நிதி தொகையாக ரூபாய் 4000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் நிதி பற்றாக்குறை காரணமாக ரொக்கப்பணம் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க முடியவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரிசி கார்டுதாரர்களுக்கு அதிக அளவில் ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து திமுக ஆட்சி சட்டமன்ற தேர்தல் அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுன் அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு அந்த நகைக்கடன் பல்வேறு நிபந்தனையின் பேரில் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார்.
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதன் அடிப்படையில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு குறித்து பொள்ளாச்சி வடக்கு – கிழக்கு ஒன்றிய பா.ஜ.தலைவர் மாணிக்கம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் பார்க்காமல் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 2022ல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்புடன், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம் ரூபாய் 2500 போல் இந்த திமுக ஆட்சியிலும் ரேஷன் கார்டுதார்களுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.