1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 31ம் தேதி முதல் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்கள் குளிர்கால விடுமுறையானது 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளி விடுமுறை

தற்போதுள்ள கடுமையான குளிர் காலம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக உத்தரபிரதேச பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநில அடிப்படை பள்ளிக்கல்வித் துறை முதல் முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31 முதல் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – முதல்வர் உத்தரவு!

குறிப்பாக, இந்த குளிர்கால விடுமுறை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பள்ளிகளில் குளிர்கால விடுமுறைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வந்த நிலையில், இந்த முறை மாநிலம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த இடைவேளையின் போது, உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடு எதுவும் நடத்தப்படாது.

குளிர்கால விடுமுறைக்கு பிறகு, ஜனவரி 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உத்தரப்பிரதேச அடிப்படைக் கல்வித் துறையின் உத்தரவுகளின்படி, எந்தவொரு மாணவரையும் ஆப்லைன் அமர்வுகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கூடுதலாக, ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஆன்லைன் விரிவுரைகளை பள்ளிகள் நடத்த வேண்டும். மேலும், பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளி நிர்வாகம் வழக்கமான சுத்திகரிப்பு செயல் முறைகளையும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் பயன்படுத்தப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!