தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் நிதியுதவி – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் நிதியுதவி - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் நிதியுதவி - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் நிதியுதவி – அரசாணை வெளியீடு!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா நிதியுதவி:

2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா தொற்று. இதன் காரணமாக பல உலக நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. முதல் அலையை தொடர்ந்து 2ம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இறப்பு விகிதம் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தினை குறைப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே இருந்தது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!!

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு இன்றியமையாதது. 2ம் அலையில் பொதுமக்கள் பலர் உயிரிழந்து வந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் இறப்பும் குறிப்பிடத்தக்கது. பேரிடர் காலங்களில் மக்களுக்கு துணை நின்று இறந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவ பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!