தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் – எடப்பாடி பழனிச்சாமி!

0
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் - எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் – எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக மாவட்டங்களில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு:

சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார். அதில் வரவிருக்கும் தேர்தல் சாதாரணமானது அல்ல என்றும் கட்சியின் வெற்றிக்கு உறுப்பினர்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

மேலும் பூத் கமிட்டி அமைப்பு வலிமையாக இருந்தால் தான் தொகுதியில் வேட்பாளர்கள் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். வாக்கு சாவடிகளில் கள்ள ஓட்டுகள் போடுவதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் தற்போது 36 அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பருவமழை இன்னும் ஏழு மாதங்கள் கழித்து தான் தொடங்கும். அதுவரையிலும் காவிரி குடிநீரை மட்டும் நம்பி இருக்க முடியாது.

Whatsapp பேமெண்ட் வசதியில் வந்த மாற்றம் – இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்!!

இன்னும் ஐந்து அடி அளவுக்கு நீர் குறைந்துவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அரசு இது குறித்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!