தமிழகத்தில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உரையில், 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில் திண்டிவனம், செய்யாறில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முதல் சட்டப் பேரவை ஜூன் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத்தலைவர்கள், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றனர். இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்றைய பதில் உரையில் தமிழக முதல்வர் அவர்கள், புதிதாக 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில் திண்டிவனம், செய்யாறில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வட மாட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக வேலையில்லாமல் சிரமத்தில் உள்ளவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.