இந்தியர்களுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் கண்காணிப்பு பணி – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம், இந்தியாவில் இருந்து கொண்டே அந்நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியை மேற்கொள்வதற்காக இந்தியர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கு ரூ 30 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு பணி
இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்காவில் இருப்பவர்களை பாதுகாக்கும் ஒரு கண்காணிப்பு பணிக்காக, ஒரு CCTV கேமரா நிறுவனம் இந்தியர்களை தேடிக்கொண்டிருக்கிறது. அதாவது இந்த கேமரா நிறுவனம், அமெரிக்க நகரங்களில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்க இந்தியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. அதாவது இப்பணியில் அமர்த்தப்படும் இந்தியர் ஒருவர், அந்நிறுவனம் பொறுத்தியுள்ள கேமராக்களை கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
அதன் மூலம் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும்படி அல்லது வித்தியாசமாக யாரேனும் நடந்து கொண்டால் உடனடியாக அங்கிருப்பவர்களை உஷார்படுத்த வேண்டும். இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘லைவ் ஐ சர்வேலென்ஸ்’ என பெயரிடப்பட்ட இப்பணி இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் துவங்க உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், கணிப்பொறி மூலம் வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட், கேஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களை கண்காணிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த இடங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களோ அல்லது அங்கு பணியாற்றும் ஊழியர்களோ வித்தியாசமாக நடந்து கொள்வது தெரிந்தால், அந்த தகவல்களை அந்நிறுவனத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதற்காக 399 அமெரிக்க டாலர் அதாவது, இந்திய பணமதிப்பில் ரூ.29 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. இந்த பணியில் சேருபவர்களுக்கு தகுதியாக, 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருப்பவராகவும், கணிணி பயன்படுத்த தெரிந்திருப்பவராகவும் வேண்டும். மேலும் பேச்சு திறன், புத்திகூர்மை உடையவராக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.
How to apply?
How to apply for this job sir?
How can apply the job
How to apply for theis job sir
How to apply for this job?
Iam waiting in job
How to apply for this
iam waiting for job