தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

தமிழக்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசியர்கள் காலை 9.15க்குள் பள்ளிக்கு வருகை புரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

CEO சுற்றறிக்கை:

தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஏற்கனவே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டது.

பழைய 25 பைசா நாணயத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?

தற்போது ஆசிரியர்கள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு மற்றும் மாணவர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர். பாதி ஆசிரியர்கள் கொரோனா ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களில் இருப்பதால் பணிக்கு வரவில்லை இந்த நிலையில் தற்போது பணிக்கு வரும் ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் மாணவர் சேர்க்கைக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வரக்கூடாது எனவும் மாணவ, மாணவியரை காத்திருக்க வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். இதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!