ரூ.21,000 ஊதியத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வரும் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது. அதன்படி தற்போது மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 8 மடங்கு கட்டணம் உயர்வு!
தற்போது அரசுத்துறை பணியிடத்திற்கான போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்று ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியலாளர், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல், மருத்துவ மனநலம், பி.எல், எல்.எல்.பி, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையோர் https://tenkasi.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி மற்றும் அனுபவ சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் காப்பக நல அலுவலர் அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி, மேல்நிலைப்பள்ளி நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854 என்ற அஞ்சல் முகவரிக்கு மார்ச் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- பாதுப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 02 ; சம்பளம் மாதம் ரூ.21,000
- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – 01 ; சம்பளம்: மாதம் ரூ.21,000
- ஆற்றுப்படுத்துநர் – 01; சம்பளம்: மாதம் ரூ.14,000
- சமூகப்பணியாளர் – 02; சம்பளம்: மாதம் ரூ.14,000
- கணக்காளர் – 01; சம்பளம்: மாதம் ரூ.14,000
- தகவல் பகுப்பாளர் – 01; சம்பளம்: மாதம் ரூ.14,000
- உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – 01; சம்பளம்: மாதம் ரூ.10,000
- புறத்தொடர் பணியாளர் – 02; சம்பளம்: மாதம் ரூ.8,000
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்