அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 21.5% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) 11.25 சதவீதத்திலிருந்து 21.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. இது ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிசெய்யும் நோக்கில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி மிச்சமானது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது 2வது அலை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து உள்ளது. இதனையடுத்து மாநில அரசுகளும் DA உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
WhatsApp Status டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அந்த வகையில் கர்நாடகா அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியை (DA) 11.25 சதவீதத்திலிருந்து 21.50 சதவீதமாக உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2021 ஜூலை 1 முதல் அடிப்படை ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 11.25 சதவீதத்திலிருந்து 21.50 சதவீதமாக DA விகிதங்களை உயர்த்துவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இது மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து செலுத்தப்படுகிறது என்று அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
TN Job “FB Group” Join Now
யு.ஜி.சி / ஏ.ஐ.சி.டி.இ / ஐ.சி.ஏ.ஆர் ஊதிய அளவுகளில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இந்த உத்தரவுகள் பொருந்தும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுகள் முழுநேர அரசு ஊழியர்கள், பஞ்சாயத்துகளின் ஊழியர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் முழுநேர ஊழியர்கள் மற்றும் வழக்கமான நேர அளவீடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாரியங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அல்லது தன்னாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.