பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்ப காலத்தில் செய்த காரியம் – ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரினா, தனது கர்ப்பகால புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவற்றை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்கள் காட்டம்
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய பரினா தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் மோசமான வில்லியாக உருவெடுத்துள்ளார். இத்தொடரின் மூலம் சிறந்த வில்லியாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு திருமணம் முடித்து நான்கு ஆண்டுகள் கழித்துள்ள நிலையில் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட அவர் 7 மாத கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, பரினாவுக்கு பலர் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். பொதுவாக திரையுலகை சேர்ந்தவர்கள், மற்ற சாதாரண மக்கள் கூட தங்களது கர்ப்பகால போட்டோ ஷூட்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை பரினாவும் தனது கர்ப்பகால போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்து, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
TN Job “FB Group” Join Now
அதாவது கருப்பு நிற உடையணிந்து, வயிற்றில் மருதாணியை கொண்டு சில படங்களை வரைந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர். வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி மருதாணி பூசிக்கொள்வது நல்லதல்ல என்றும், மருதாணி பூசுகிற இடம் இது தானா என்றும் கமெண்ட் பக்கத்தில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்றாலும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆர்வமாக பதிவிட்டு வருகிறார் பரினா.