2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – தேதி அறிவிப்பு .. பணிகள் தீவிரம்!

0
2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி - தேதி அறிவிப்பு
2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – தேதி அறிவிப்பு .. பணிகள் தீவிரம்!

2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு:

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டு போட்டி நடத்தப்படும். அலங்காநல்லூர் வாடிவாசல் ஜல்லிக்கட்டு புகழ் பெற்றது. அதனை தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடத்தப்படும். வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும் அரசு அறிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள அடைக்கல மாதா தேவாலய திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தற்போது போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பினர் இணைந்து வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!