இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்? ரிசர்வ் வங்கி விளக்கம்!
தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் பெருமளவு நீக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த உண்மை விவரங்களை இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) வழங்கியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் காணலாம்.
ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் கருப்பு பணத்தின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வடிவத்திலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்தது. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் பதுக்கல் சம்பவங்கள் நடைபெற்றது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொருட்கள் பதிவு செய்யும் முறையில் மாற்றம்!
இதனால் இந்த ரூபாய் நோட்டுகளை மீண்டுமாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே அடியாகத் தடை செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக மத்திய அரசும் கூறியது. அதன்படி 2020 மார்ச் மாத நிலவரப்படி மொத்தம் 274 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
Exams Daily Mobile App Download
இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 245 கோடியாகவும், 2022 மார்ச் மாத இறுதியில் 214 கோடியாகவும் குறைந்துவிட்டது. குறிப்பாக, மதிப்பு அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 22.6 சதவீதமாக உள்ளது. இப்போது, இந்தியாவில் 214 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அதாவது புழக்கத்தில் உள்ள மொத்த 2000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 1.6 சதவீதம் ஆகும். இது தவிர இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவது கிடையாது. அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.