மத்திய அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை – PM Kisan திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு!
மத்திய அரசு விவசாயிகளுக்கு என்று பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 10 தவணையாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 11 தவணையை பெற உள்ளவர்கள் இ-கேஒய்சி விவரங்களை சரிபார்த்து கொள்வது அவசியமானது. இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
உதவித்தொகை
மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு 2022 – இன்று மாலை வெளியீடு! தேர்வர்கள் கவனத்திற்கு!
இதுவரை இந்த திட்டத்தில் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 11ஆவது தவணை தொகையை பெறுவதற்கு விவசாயிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதில் சில பேருக்கு தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆதார், மொபைல் நம்பர், பயனாளியின் பெயர், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் தங்களுக்கு தவணைப் பணம் சரியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதனால் இத்திட்டத்தில் உள்ள பயனாளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
தற்போது தங்களின் விவரங்களை சரியானதாக உள்ளதாக என்பதை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. இதற்கு முதலாவதாக pmkisan.gov.in என்ற பிஎம் கிசான் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இப்பொது ‘Beneficiary Status’ என்ற ஆப்சனில் சென்று ’Get Data’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. இறுதியாக திரையில் தங்களுடைய விண்ணப்ப நிலையை பற்றி காண்பிக்கப்படும். மேலும் பயனாளிகள் தங்களது இ-கேஒய்சி விவரங்களை சரிபார்த்து கொள்வது அவசியமானதாகும்.
4. தங்களின் விவரங்கள் தவறாக இருந்தால் பிஎம் கிசான் இணையதளத்தில் மாற்றி கொள்ளலாம். அதன்படி இப்போது தங்களின் பணம் சிக்கலின்றி தங்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.