அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் – மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மின்சாரம் இலவசம்:
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இத்தொகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக கட்சியினர் அதிக வாக்குகளை பெற்றனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக தலைமையில் தற்போது பசுவராஜ் பொம்மை அவர்கள் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு Smart TV வகுப்புகள் – அசத்தும் ஆந்திரா முதல்வர்!
Follow our Instagram for more Latest Updates
தேர்தல் நடந்த 5 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து நடப்பாண்டு சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி 2023ம் ஆனது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் ஆட்சியை பிடிக்க தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
மக்களின் குரல் என்ற பெயரில் இன்று பெலகாவி நகரிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 200 மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.