அங்கன்வாடி குழந்தைகளுக்கு Smart TV வகுப்புகள் – அசத்தும் ஆந்திரா முதல்வர்!
ஆந்திர மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
அங்கன்வாடி திட்டங்கள்:
அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவரும் சிறப்பான பலனை அனுபவிக்குமாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். அதாவது, அங்கன்வாடிகளில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் தான் அதிக அளவில் பயில்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அடிப்படைக் கல்வி கற்பிக்கும் பணிகள் அனைத்தும் இனி Smart TV மூலம் நடத்தப்படும்.
ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு – விரைவில் இடைத்தேர்தல்!
அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் முட்டைகளை வழங்க வேண்டும் என்றும், அவற்றை தரமானதாகவும், சுகாதாரமாகவும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் நடத்திய ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றின் படி செயல்பட உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் சுவையூட்டப் பட்டதாக இருக்க வேண்டும் என்றும், தொடர்சியாக குழந்தைகளின் உடல்நலனை பரிசோதிக்க வேண்டும் என்றும் அனைத்து தாய்மார்களுக்கும் சத்தான உணவு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.