தமிழகத்தில் 2 முதல் 5% வரை இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் 2 முதல் 5% வரை இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் 2 முதல் 5% வரை இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் 2 முதல் 5% வரை இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஊதிய உயர்வு

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

இதில் தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதில் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சம்பள உயர்வு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக சில தகவல்களை கூறியுள்ளார்.

இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தொழிலாளர்கள் சங்கத்தினர் 8% ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 2% முதல் 5% வரை ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்த நிதி அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு இன்னும் 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பணியில் இருக்கும் போது இறந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும். அத்துடன் மகளிர் இலவச பயண பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு படித்தொகை வழங்கப்படும். இதையடுத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!