மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை!

மணிப்பூர் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து அரசு துறை அலுவலகங்களும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் வேலை நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலை நாட்கள்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் ஓய்வின்றி தொடர்ந்து அரசுக்கு சேவையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த வருடம் 2 கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 3% அகவிலைப்படி உயர கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தினர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய கார்டு பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்த நிலையில் மணிப்பூரில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பிரேன் சிங் மீண்டும் பதவியேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே அலுவலகங்கள் செயல்படவும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் கோடை காலத்தில் மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் மேலும் வகுப்புகள் தினமும் காலை 8 மணிக்கு துவங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!