மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத் தொகை? விரைவில் அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைத்திருக்கும் அகவிலைப்படி (DA) தொகையை ஒரே தவணையில் கொடுக்க வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
DA உயர்வு
தற்போது அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, மோடி அரசு 1.5 ஆண்டுகள் அதாவது 18 மாத கால DA நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் வழங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த DA நிலுவைத்தொகை மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் தொகை ஒரே தவணையில் கிடைக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் – 4வது நாள் போர்!
இப்போது மத்திய அரசு ஊழியர்கள், 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். இது தொடர்பாக JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், கவுன்சில் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் DA நிலுவை குறித்து அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரு முறையில் கொடுத்து தீர்க்க வேண்டும் என தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இப்போது மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத் துறை அதிகாரிகளுடன் JCM இன் கூட்டுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கப்படும் என்றும், இது குறித்து அரசிடம் இருந்து உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் – டிக்கெட் விலை உயர்வு!
இப்போது DA நிலுவைத்தொகை மூலம் நிலை-1ல் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மொத்த DA தொகை இருக்கும் என்று தெரிகிறது. மறுபுறத்தில் நிலை-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு), ஊழியர்களின் DA நிலுவை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அமைச்சரவை DA அளிப்பது குறித்து கிரீன் சிக்னல் கொடுத்தால், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுடன் மத்திய அரசு ஊழியர்களும் சலுகைகளை அனுபவிப்பார்கள்.