தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் – 4வது நாள் போர்!

0
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் - 4வது நாள் போர்!
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் - 4வது நாள் போர்!
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் – 4வது நாள் போர்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 4 வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியற முயற்சி செய்து வருகின்றனர், அங்கு தலைநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெளியேறும் மக்கள்:

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 4 வது நாளாக தொடர்ந்து தீவிர நிலையை அடைந்து வருகின்றது. ரஷ்யா அதிபர் அணு ஆயுதங்களை கையாளும் நிபுணர்களை தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இன்னொரு புறம் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியிருந்தார். உக்ரைனிற்கு பல உலக நாடுகளும் ஆயுத எதிர்ப்பு டாங்கிகளையும், ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். இதனால் உக்ரைன் தலைநகர் கிய்வ் நகரை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் நியூஸ் – டிக்கெட் விலை உயர்வு!

ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து சமாளித்து தனது தலைநகரை காப்பாற்றி வருகிறது உக்ரைன். உக்ரைனின் தலைநகர் கிய்வ் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த மேயர் அங்கு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளார். அரசின் உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரியும் மக்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் என்று எச்சரித்தது. ஆனால் தற்போது அரசின் உத்தரவையும் மீறி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். ரஷ்யப் படைகள் நகரின் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகின்றது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள்!

கிய்வ் வின் பிரதான ரயில் நிலையத்தில், சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்தனர், சண்டையிலிருந்து விலகி, தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய கறுப்பு உடையணிந்த காவல்துறையினர் இவர்களுக்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்ட்டுள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடப்பதால் மக்கள் நகரில் இருந்து வெளியேறும் முடிவிற்கு வந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!