தமிழகத்தின் இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!
தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வரும் வானிலையின் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் பல பகுதிகளிலும் கனமழை நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பல அணைகளின் நீர் கொள்ளளவு முழு அளவை எட்டி வருகிறது. அபாயத்தை தவிர்க்கும் வகையில், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய வானிலை அறிக்கையின் படி, தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம்,இராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் பாக்கியா வீட்டில் நடந்த நல்ல விஷயம்.. குட் நியூஸ் சொன்ன ஜெனி!
Exams Daily Mobile App Download
கூடுதலாக, ஞாயிற்று கிழமையான இன்று காலை கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர்,ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,காஞ்சிபுரம், கடலூர் ,பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.