தமிழக அரசு பள்ளிகளில் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் – பணி நீட்டிப்பு வழங்க ஆணை!
தமிழகத்தில் உள்ள 2012-13 ஆம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலமாக நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதில் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 01.04.2021 முதல் 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கக்கோரி விவரங்கள் வழங்குதல் குறித்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
பணி நீட்டிப்பு வழங்குதல்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2012-13 ஆம் ஆண்டுக்கான அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலமாக நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக தோற்றுவிக்கப்பட்டு அப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணமோசடி எச்சரிக்கை!
1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்கள் குறித்த அறிவிப்பு:
- மாவட்டம்
- பள்ளி/அலுவலகத்தின் பெயர்
- 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ள பணியிடங்கள் எத்தனை மற்றும் காலிப்பணியிடங்கள் எதனை எந்த தேதி முதல் காலியாக உள்ளது என்ற விவரம்.
- மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் விவரம்
- புத்தாக்கம் செய்யப்பட வேண்டிய காலிப்பணியிடங்கள் எத்தனை என்ற விவரம்
- காலி பணியிடங்களில் தற்போதைய தேவை குறித்தும், உபரி பணியிடங்களாக உள்ள காலி பணியிடங்களை சரண் செய்வது குறித்தும் விரிவான அறிக்கை.
இந்த விவரங்கள் அனைத்தும் அரசிற்கு உடனே அனுப்ப வேண்டி உள்ளதால் இதில் தனிக்கவனம் செலுத்தி மேற்காண் படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கோள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.