தமிழக டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு விற்பனை – மதுரை முதலிடம்!!
தமிழகத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்பு நேற்று (ஜூன் 14) 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.165 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
டாஸ்மாக்:
தமிழகத்தில் நேற்று (ஜூன் 14) முதல் தளர்வுகள் அடங்கிய புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது. அரசு வகுத்த 14 பாதுகாப்பு நெறிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 35 நாட்களுக்கு பின்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களது வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட தொகையை மீட்கும் வழிமுறை – RBI அறிவிப்பு!
இதை அடுத்து நேற்று அனைத்து மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சில இடங்களில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 164 கோடி 87 லட்ச ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிக மதிப்பில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட பட்டியலில் மதுரை முதல் இடத்தை பிடித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி மதுரையில் நேற்று (ஜூன் 14) ஒரே நாளில் ரூ.49.96 கோடி அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இடம் பிடித்த சென்னை மாநகரில் ரூ.42.96 கோடி அளவில் மது விற்பனை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.