TNPSC யில் குரூப் 5A தேர்வு அறிவிப்பு – 161 காலிப்பணியிடங்கள்! முழு விவரம் இதோ!
தமிழகத்தில் தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது குரூப் 5 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 5 தேர்வு:
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. இதன் காரணமாக படித்த இளைஞர்களும், போட்டி தேர்வுக்கு தயாரானவர்களும் வேலை இல்லாமல் இருந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதால் மத்திய அரசு அனைத்து வகையான போட்டி தேர்வுகளையும் நடத்த அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் NAT தேசிய விருதுக்கு தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் அரசு போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளும் நடத்தப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு, காவலர் பணியிடங்களுக்கான தேர்வு, மத்திய அரசின் குரூப் D தேர்வுகள் நடைபெற உள்ளன.
அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப குரூப் 5 தேர்வு நடத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குரூப் 5 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் 26 முதல் 28 ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18 ம் தேதி நடைபெறும் என தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்