தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் NAT தேசிய விருதுக்கு தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு இந்தியா முழுவதும் உள்ள 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரும் இந்த தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
NAT தேசிய விருது:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலத்திலும் சிறந்து விளங்கும் தனித்துவமான ஆசிரியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திய விதம் ஆகியவற்றை போற்றும் விதமாக ஆசிரியர்களுக்கான தேசிய விருது (NAT) 2022 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சிறந்த தனித்துவமான ஆசிரியர்களாக 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் உத்தரகாண்ட் மற்றும் அந்தமான் தீவுகளை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆசிரியர் தினத்தன்று வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விருதினை வழங்க இருக்கிறார். அதாவது, மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தியதன் காரணமாக அவர்களை கௌரவிக்கும் விதத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. மேலும், இந்த விருதிற்கு எளிமையாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தனித்துவமான ஆசிரியர்கள் என்கிற அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலமாக மூன்று கட்டத் தேர்வுகள் வைக்கப்படுகின்றது. இந்த அனைத்து செயல்முறையின் அடிப்படையில் தான் தேசிய விருதுக்கு தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பாள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வரும் கே. ராமச்சந்திரன் என்கிற ஆசிரியரும் ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்