தமிழகத்தின் 16 பகுதிகளில் நாளை (செப் 26) மழை வெளுத்து வாங்கும் – வானிலை ரிப்போர்ட்!
தமிழகத்தில் தற்போது பகல் நேரங்களில் வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மலை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை விழுப்புரம், கடலூர்,அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செப்டம்பர் 27, 28 மற்றும் 29ம் தேதிகளிலும் தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை லேசான மழை மட்டுமே இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பகலில் வெயில் கோடை காலத்தை போல கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
நாளை (செப்.26) தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உஷார்! உஷார்!
Exams Daily Mobile App Download
இதனால் மாலை நேரத்தில் பெய்யும் மழையை மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். புயலுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லாததால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் எந்த தடையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்