தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 15ம் தேதி விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தின விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடை
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழா மிகவும் பிரமாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை, கோயம்பேடு, மதுரை உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் 4 கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 7 இணை கமிஷனர்கள், 22 துணை கமிஷனர்கள் தலைமையில் 22 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல நிகழ்ச்சி நடைபெறும் சாலைகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டாயமாக மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு – அரசு அதிரடி
Exams Daily Mobile App Download
அதன்படி வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று விற்பனைக் கடைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய மற்ற பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்ளிட்டவை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம், சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறி செயல்படும் மதுபான கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.