Post Office பணத்தை அள்ளித்தரும் திட்டம் – தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!
போஸ்ட் ஆபீஸில் உள்ள அனைத்து சேமிப்பு திட்டங்களும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பதற்காக அஞ்சல் அலுவலகம் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமித்து வருகின்றனர்
பொது வருங்கால வைப்பு நிதி:
பொதுமக்கள் அனைவரும் கொரோனா எழுச்சி காரணமாக பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். இந்த நிலையில் சேமிப்பு என்பது நிதி நெருக்கடி காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்த மக்கள் தற்போது போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். பாதுகாப்பு அம்சம் பொருந்திய முக்கிய திட்டம் மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும், நிலையான வருமானம் கிடைக்கும். இதனால் பிபிஎஃப் திட்டம் 100% ரிஸ்க் இல்லாத திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தை பொறுத்தவரையில், தற்போதைய நிலவரப்படி 7.1% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். அதற்கு மேற்கொண்டு இந்த கணக்கை 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம்.இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல் பிபிஎஃப் திட்டத்தின் மூலம் முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!
இந்நிலையில் தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் நபர் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ.150 முதலீடு செய்து, மாதத்திற்கு சுமார் ரூ.4500 முதலீடு செய்தால்,ஒரு வருடத்திற்கு முதலீட்டு தொகை ரூ.54,000 ஆகும். இந்த முதலீட்டு தொகை 20 ஆண்டுகளில் ரூ.10.80 லட்சமாக இருக்கும். இதனுடன் கூட்டு வட்டியும் சேர்த்து, முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.20 லட்சத்தை பெறலாம்.