தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது மழை பொழிவு பெரிதாக இல்லை. வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இருப்பினும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது லேசான மழை பொழிவு ஏற்படுகிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை கடலூர் பகுதிகளில்மிதமான மழை பெய்தது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தினசரி வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை குறித்த அறிக்கையை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
19.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
20.02.2022 முதல் 22.02.2022 வரை: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் (தென்காசி , தேனி, திண்டுக்கல்,
விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி) ஓரிரு இடங்களில் இலேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
23.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் அஇகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.