திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 15 நாட்கள் தடை! தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 15 நாட்கள் தாமதித்து தரிசனத்திற்கு வருமாறு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
15 நாட்கள் தடை:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் திருமலைக்கு செல்லும் வழியில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. சேதங்கள் சரிசெய்யும் பணியானது தீவிரமாக நடத்தப்பட்டு ஓரளவு பணி முடிக்கப்பட்டது.
TCS, Infosys, Wipro மற்றும் பிற ஐடி நிறுவனங்களில் 20% ஊழியர்கள் ராஜினாமா – ஆய்வு அறிக்கை வெளியீடு!
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் மீண்டும் மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இவ்வாறு மழையின் காரணமாக ஏற்படும் சாலை பாதிப்புகளை உடனே சரிசெய்யும் விதமாக உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேவஸ்தானம் அறிவித்தது.
ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!
எனவே பக்தர்கள் எந்தவித பயமும் இன்றி தரிசனத்திற்கு வரலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரை திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனம், கட்டண தரிசனம், ஆர்ஜித சேவை, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் திருமலைக்கு செல்லும் வழியில் சாலை சீரமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் 10 அல்லது 15 நாட்கள் தள்ளிவைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.