ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!
நாட்டில் உள்ள அனைவருக்கும் முக்கிய ஆவணமாக கருதப்படுவது ரேஷன் கார்டு. அத்தகைய ரேஷன் கார்டில் விடுபட்ட குடும்ப உறுப்பினர் பெயரை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் சேர்க்கலாம். இதனை எப்படி சேர்ப்பது என்ற முழு விபரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரேஷன் கார்டு:
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அதனை போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைனில் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது.
இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் கார்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விபரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள யாருடைய விபரமாவது விடுபட்டிருந்தால் அதனை உடனே பதிவேற்றம் செய்து கொள்ளவும். பொதுவாக குழந்தைகளின் பெயர் தான் ரேஷன் கார்டில் இடம் பெறாமல் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் இந்த நிலையை உடனே சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:
1 முதலில் தமிழகத்தின் உணவு விநியோகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. பின்னர் உங்களுக்கு என்று ஒரு பிரத்தியேக Id உருவாக்க வேண்டும்.
3. தோன்றும் பக்கத்தில் Add New Member என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4. அவ்வாறு செய்தவுடன் ஒரு படிவம் (Form) திறக்கும். அந்த படிவத்தில் குடும்ப உறுப்பினரின் விபரங்களை பதிவிட வேண்டும்.
5. பின்னர் அந்த பூர்த்தி செய்த படிவம் மற்றும் படிவத்துடன் கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
6. சமர்ப்பித்த பின்னர் வழங்கப்படும் பதிவு எண்ணை வைத்து அதே இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ரேஷன் கார்டு தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும்.