இந்தியாவில் புதிதாக 14,830 பேருக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 14,830 பேர் பாதித்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 36 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும், அதனை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் முயற்சிகளை செய்து வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,20,451 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதிதாக 36 பேர் இறந்துள்ளனர். அதனால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 18,159 பேர் குணமடைந்துள்ளனர். அதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,32,46,829 ஆக உயர்ந்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 98.47% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது, சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது 1,47,512 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.