தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கோலாகலமாக வரும் 1ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
உள்ளூா் விடுமுறை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப்பூர விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். மேலும் ஆடிப்பூர விழா அன்று அதிகாலை கருவறையில் உள்ள மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மேலும் மாலையில் யாக சாலை பூஜை, விளக்குப் பூஜை, வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைப்பார். மேலும் பீடத்தின் எதிரே உள்ள மைதானத்தில், பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
பிறகு சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெறும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வந்திருந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவார்கள். மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக அரசின் வழிகாட்டுதலின்படி, பக்தர்கள் அம்மனை வழிபடவும், ஆடிப்பூர விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடப்பு ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதால்
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு? பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!
இந்த திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்தார். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுா் விடுமுறை நாள், ஆகஸ்ட் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.