CBI துறையில் 1300 காலிப்பணியிடங்கள் – முழு தகவல்கள் இதோ!
மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐயில் 1300 காலிப்பணியிடங்கள் உள்ளது என்றும் அதனால் வழக்குகள் அதிகரித்து வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வழக்குகள்:
சிபிஐயில் ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது. அவை விரைவில் நிரப்பப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இருப்பினும் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளதால் சிபிஐக்கு வரும் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிபிஐ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திணறி வருகிறது. சமீபத்தில் இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் பேட்டியளித்திருந்தார்.
SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
CBI-யில் மொத்தம் 2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி 7272 ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இவற்றில் தற்போது 5899 ஊழியர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர். இதன்படி சிபிஐயில் மொத்தம் 1374 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. நிர்வாகி களப்பணியாற்றும் பணிகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இதற்கு 5 ஆயிரம் பேர் இருக்க வேண்டும் என அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது 4 ஆயிரத்து 140 பேர் உள்ளனர்.
ஜனவரி 12 வரை 5 மாவட்டங்களில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
போதுமான அதிகாரிகள் இல்லாததால் சிபிஐயில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டின் செயல் அதிகாரிகளின் கணக்கு 5000 ஆகும். இதில் தற்போது சிபிஐயில் பணியாற்றி வருவோரின் எண்ணிக்கை மொத்தம் 4171 மீதம் 829 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே போதுமான அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் மீதம் உள்ள வழக்குகளை தற்போது பணியாற்றி வரும் அதிகாரிகள் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.