தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – ஆசிரியர்கள் பரிந்துரைகளை பெற திட்டம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து குழு அமைக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பரிந்துரைகளை பெற குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிளஸ் 2 மாணவர்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் 5ம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உஷா அவர்களின் தலைமையில் உயர் கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்டு ஓர் குழு அமைத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை பற்றி முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 அரசு துறைகளின் பெயர் மாற்றம் – இன்று அரசாணை வெளியீடு!!
மேலும் இவர்கள் வழங்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷா அவர்களின் தலைமையிலான குழு நேற்று முதல் தங்களது பணிகளை துவக்கியது. முதற்கட்டமாக பள்ளி கல்வித்துறை தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வித்துறை தலைமை பேராசிரியர்கள், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள், சட்ட பல்கலை மற்றும் மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் ஆகியோரை குழுவில் இடம்பெறும் வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து குழுவில் இடம் பெற்றுள்ளவர்களிடம் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையை முடிவு செய்ய தனித்தனியாக பரிந்துரைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ மற்றும் மற்ற மாநில பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயிக்கும் முறைகள் இறுதி செய்யப்பட உள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் முறைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளிள் 12. வகுப்பில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் , தணியாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு எதண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்
12 th. Private exam result. ?